சமகால இலங்கை சமூகத்தில் கந்தசஷ்டியின் போது கந்தசஷ்டி கவசத்தின் பங்கு
| ஆய்வாளர் | திரு விமலநாதன் விமலாதித்தன் |
| மதிப்பாய்வு | பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் |
| முன்மொழிவு | https://drive.google.com/file/d/1QSvstseBH6cZFv6p3d0wQXlarhmqKOWM/view?usp=drive_link |
இலங்கைத் தமிழ் இந்துக்களின் ஆன்மீக மற்றும் கலாசார வாழ்வில் கந்தசஷ்டி விரதம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த விரத காலத்தில், 19ஆம் நூற்றாண்டில் தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட ‘கந்தசஷ்டி கவசம்’ பாராயணம் செய்யப்படுவது ஒரு தவிர்க்கமுடியாத வழிபாட்டு முறையாகக் காணப்படுகின்றது.
இந்த ஆய்வு, சமகால இலங்கைச் சமூகத்தில், கந்தசஷ்டி விரத காலத்தில் கந்தசஷ்டி கவசம் எவ்வாறு ஒரு வெறும் பக்திப் பாடலாக மட்டுமன்றி, பக்தர்களின் உளவியல் ரீதியான பாதுகாப்பு அரணாகவும், வழிபாட்டுச் செயல்பாடாகவும் விளங்குகின்றது என்பதை ஆராய்கிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அப்பால், இலங்கையின் தனித்துவமான சமூக-கலாசார சூழலில் இந்தக் கவசத்தின் பங்களிப்பை இது ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது.
இந்த ஆய்வுத் திட்டம் முறையான 12 வார காலப்பகுதியைக் கொண்ட ஒரு விரிவான ஆய்வு வடிவமைப்பைக் கொண்டுள்ளது.வினாக்கொத்துகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் பக்தர்களின் அனுபவங்கள், குருமார்களின் கருத்துக்கள் மற்றும் அறிஞர்களின் பார்வைகள் திரட்டப்படும். கந்தசஷ்டி கவசத்தின் மொழிநடை, அதன் கவித்துவச் சிறப்பு மற்றும் இறையியல் அம்சங்கள் எவ்வாறு பக்தர்களின் மனவெழுச்சிகளோடும், சமூக அடையாளத்தோடும் பிணைந்துள்ளன என்பதைத் தரவுகள் மூலம் இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.
வாய்மொழி மரபுகள் மற்றும் உள்ளூர் வழிபாட்டு முறைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், அழியக்கூடிய எமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு இந்த ஆய்வு ஒரு பாலமாக அமையும். இது சமகால இலங்கைச் சமூகத்தில் தமிழ் மத இலக்கியங்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதுடன், எதிர்காலத் தமிழ் ஆய்வுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும்.
