info@aathaaram.org

யாழ்ப்பாணமும் சமாதிக்கோவில்களும்

யாழ்ப்பாணத்தை நாம் சித்தர் பூமி என்று தான் சொல்லவேண்டும். நாம் அறிந்த வரையில் கடையிற் சுவாமிகள் முதல் எண்ணற்ற சித்தர்களை இப்பூமி தன்னகத்தே கொண்டுள்ளது. சித்தர்கள் இப்படித்தான் இருப்பார்கள் இப்படித்தான் அவர்கள் தோற்றம் என்று கணக்கிடமுடியாது. ஈழத்துச் சித்தர்களை விரல் விட்டு எண்ணமுடியாது. நாம் அறிந்த சித்தர்கள் ஒரு சிலரே. அவர்களை விட ஏராளமான சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆலயவழிபாடுகள் எவ்வளவு நமது வாழ்வை நெறிப்படுத்துமோ அதைவிட சித்தர் சமாதிக் கோயில்கள் சக்தி […]

யாழ்ப்பாணமும் சமாதிக்கோவில்களும் Read More »

அருட்பெரும் பெண்சித்தர் சடையம்மா

ஈழத்து சித்தர்கள் என்றாலே பல சுவாமிகள்தான் எங்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஈழத்து சித்தர் மரபிலே சுவாமினிகளும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஈழத்து முதாலாவது பெண் சித்தராக அடையாளப்படுத்தப்படுபவர் அன்புக்கும் வழிபாட்டுக்குமுரிய சடையம்மா அவர்கள். ஆன்மீக வழி அன்பர்களுக்கு அவர் பெண்சித்தராக இருந்தாலும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னோடியான ஆளுமைமிக்க தமிழ் பெண்ணாக வாழ்ந்தவர் என்பது சடையம்மாவினுடைய ஆராயப்படவேண்டிய  இன்னொரு பக்கமாக இருக்கிறது. 1865.08.19 ( ஆவணி ரோகினி) நன்னாளில் வீரகத்திப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாக திருநெல்வேலி கிழக்கில்

அருட்பெரும் பெண்சித்தர் சடையம்மா Read More »

ஆய்வுப் பிரிவை ஆரம்பிக்கின்றது ஆதாரம் அறக்கட்டளை

இலங்கையின் இந்து சமூகத்தின் ஆன்மிக வாழ்வியலை ஆராய்தலையும் ஆவணப்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டு, ஆதாரம் அறக்கட்டளை தனது ஆய்வுப்பிரிவினை ஆரம்பிக்கின்றது. கடுகதியில் மாறிவரும் வாழ்க்கைச்சூழலில் தொலைத்து விடுகின்ற ஆன்மீக வாழ்வியலை மீட்டெடுத்து, அதனைப் பயில்வதுடன் வருங்கால சந்ததியினருக்கும் வழங்கும் அரும்பணியை ஆதாரம் அறக்கட்டளை, தனது ஆய்வுப்பிரிவினூடாக முன்னெடுக்கவுள்ளது. மனித ஒழுக்கம், வாழ்வியல் மதிப்புகள், சமூக உறவுகள், என அனைத்தையும் வழிநடத்தும் ஆழமான ஆன்மிகப் பாரம்பரியங்கள் பேணப்பட வேண்டியதுடன்., மூத்தவர்களின் அனுபவங்கள், பாரம்பரிய அறிவுகள், ஆன்மிக சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில்

ஆய்வுப் பிரிவை ஆரம்பிக்கின்றது ஆதாரம் அறக்கட்டளை Read More »